About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Saturday, January 16, 2010

கண்ணப்ப நாயனார் 2

“இறைவா புலியும் சிங்கமும்,கரடியும் யானையும் அலையும் இடத்திலே இப்படி தனியாக இருக்கிறாயே ? ஐயோ எப்படி நான் உங்களை விட்டு பிரிந்து போவேன்? உனக்கு இறைச்சி கொண்டு வருபவரும் யாருமில்லையே ? இனிமேல் தினமும் நான் இறைச்சி தருகிறேன் “என்று யோசிப்பார். பிரிவார்.

திரும்பவும் சென்று கட்டித் தழுவுவார் ஒரு பசுவினை விட்டு பிரியும் கன்றுக் குட்டியைப் போல் தவிப்பார். மிகவும் கஷ்டப்பட்டு மலையை விட்டு இறங்குவார் பொன் முதலி ஆற்றை கடந்தார்.

அங்கே காடன் ‘ஏன் இத்தனை நேரம்’ என்று கேட்க அதற்கு நாணன் குடுமிதேவரை கண்டதும் உடும்பைப் போலே கட்டி அணைத்துக் கொண்டான். திண்ணன்.

அவருக்கு தின்ன இறைச்சி கொடுக்கவே வந்துள்ளான் . நமது குலத்தன்மையை விட்டு விட்டான் அந்த தேவனுக்கே அடிமையாகி விட்டான்.

காடனும் "என்ன காரியம் செய்தாய்? என்று வினவ திண்ணனோ இதையெல்லாம் கவனிக்காமல் பன்றியை தீயில் வதக்கி சுட்டு பதமாக்கி சுவை பார்த்து அதிலும் நல்ல‌சுவையானவறறை எடுத்து வைத்தான்.மற்றதை எல்லாம் கீழே எறிகின்றான்
நல்ல பசியிருந்தும் அவனும் தின்னாமல் நமக்கும் கொடுக்காமல் இப்படி கீழே எறிகின்றானே என்று இருவரும் மிகவும் வருத்தப்பட்டார்கள்
. இவன் ஏதோ மயக்கத்தில் இருக்கிறான். இவன் தந்தை நாகனிடம் போய் சொலலி அழைத்து வருவோம். என்று சென்றனர்.

ஊனமுதை எடுத்து கொண்டு ஆற்றில் நல்ல நீரை வாயில் எடுத்துக் கொண்டு மலர்களை கொய்து தலைமயிரில் செருகி விரைவுடன் மலை ஏறினார்.

ஏற்கெனவே இருந்த மலரை மாற்றி வாயில் இருந்த நீரை உமிழ்ந்தார். தலையிலிருந்த மலர்களை வைத்தார். சுவை பார்த்து கொண்டு வ்ந்த இறைச்சியை உண்பதற்கு வைத்தார்/கொடிய விலங்கினால் துன்பம் நேராமல் இருக்க காவல் காத்தார்.பின்பு விடிந்ததும் சென்றார். மறு நாள் சிவாகம நெறிப்படி காளத்தியப்பரை வழிபாடு செய்யும்சிவ கோச்சாரியார் நீராடி நீர் , அமுது, மலர் கொண்டு வந்து இறைச்சியும் எலும்பும் கண்டு நடு நடுங்கி ஓடினார். என்ன இது? யார் இப்படி செய்தனர்? என்று எல்லாவற்றையும் அ கற்றி ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு வந்தார். மீண்டும் பூஜை செய்துவிட்டு விடை பெற்றார். திண்ணனோ மறு நாள் மீண்டும் இறைச்சி கொண்டு வந்தார்.ஐயனே இது நேற்றையதை விட இன்னும் சுவையானது. உண்பாயாக.என்று வேண்டுகிறார்.

இப்படியாக பகலில் வேட்டையாடி இர வில் காவல் காத்து வர சிவகோசாரியரோ அவர் சென்ற பின்பு வந்து சுத்தப்படுத்தி அபிஷேகம் செய்வார். நாகனும் தேவராட்டியும் இதையறிந்து மிகவருந்தி அவரைக் காண காளத்தி வருகிறார்.திண்ணன் இவையெல்லாம் கவனிக்கவே இல்லை. நான்கைந்து நாட்கள் இப்படி சென்றன. உண்மையிலேயே திண்ணன் அந்த இறை மயக்கத்திலேயே இருந்த்தனால் கவனிக்கவே இல்லை. மிகவும் வருத்திய சிவகோச்சாரியார் கனவில் சிவபெருமான் தோன்றி "என்னை வந்துபூசிப்பவன் சாதாரண வேடன் அல்ல. அவன் வடிவே அன்பு மயம் அவன் செயலே எனக்கு இனிமை" ":அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையரியும் அறிவென்றும் அவனுடைய செயலெ ல்லாம் நமக்கினியவாம் என்றும் " என்கிறார். மேலும் இறைவன் சொல்கிறார். அவன் வாயிலிருந்து உமிழும் உமிழ் நீரானது கங்கை நீரினும் புனிதமானது நாளை ஒருபுறமாக நின்று நடப்பதை கவனி என்று சொல்லி மறைந்தார். சிவகோசரியார் கோவிலில் பின்புறம் ஒளிந்திருக்க திண்ணன் வரும்போடு சிலையிலிருந்து ஒரு கண்ணிலிருந்து உதிரம் வழியத்தொடங் கியது. திண்ணனோ இதைக கண்டதும் ஐயோ என்று அலறி கீழே மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.வாயிலிருந்த நீர் கீழே சிந்த மலர்களோ சிதறின. சிறிது நேரம் கழித்து மீண்டும் கண் விழித்து எழுந்ததும் உதிரத்தைக் கண்டார். பிறகு அதை துடைத்து விட்டார். துடைக்க துடைக்க உதிரமானது வழிந்துக் கொண்டே இருந்த்து. பிறகு கோபம் வந்து வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு "யாரிதைச் செய்தது? புலியோ,அன்றி சிங்கமோ அல்லது வேறு யாரேனும் வேடரோ ? என்று வெளியே சென்று பார்த்து மீண்டும் வந்து ஐயோ என் செய்வேன்? எப்படி இந்த் உதிரத்தை நிறுத்துவது? என்று அவரது பாதத்தில் வீழ்ந்தார்.கண்ணீர் விட்டார். காட்டிற்க்குள் ஓடிச் சென்று மருந்து மூலிகைகளை கொண்டு வந்து பிழிந்தார். "ஊணுக்கு ஊண் உற்ற நோய் தீரும் என்ற பழமொழி நினைவுக்கு வர "எனது கண்ணை அப்பினால் என் தந்தையின் கண்ணிலிருந்து வழியும் உதிரமானது நிற்கும் என்று நினைத்து வேகமாக எதைப் பற்றியும் யோசியாமல் வில்லை எடுத்து தனது வலது கண்ணை தோண்டி எடுத்துஅப்பினார். குருதியும் நின்றது.அதை இன்னொரு கண்ணின் மூலமாக‌ கண்டார். உடனே குதித்தார். கூத்தாடினார். அன்பின் மிகுதியால் தன் கண்ணின் வலிகூட தெரியாமல் அப்படியொரு ஆனந்தப் பட்டார்.: உடனே இறைவனின் மறு கண்ணிலிருந்தும் குருதி உதிரத் தொடங்கியது. இம்முறை அவர் கவலைக் கொள்ளவில்லை.
அவருக்குத்தான் வழி தெரிந்து விட்டதே? இன்னொரு கண்தான் இருக்கிறதே அதைக் கொடுத்தால் உதிரம் நிற்குமல்லவா?என்று நினைத்தார். பிறகு அடடா நமது கண்ணை எடுத்ததும் இறைவனின் கண் இருக்குமிடம் நம‌க்கு தெரியாமல்போய் விடுமே என்று நினைத்து தனது இடது காலை எடுத்து இறைவனின் கண்மீது வைத்தபடி கணையை எடுத்து தனது இனனொரு கண்ணையும் குத்தப் போகும் போது " நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப"என்று கூறி இறைவன் தடுத்தாட்கொண்டார்.
எனது வலது புறத்தில் என்றென்றும் மாறுபாடு இல்லாமல் இருப்பாய் என்றார். . இத்தனையும் ஒளிந்திருந்தபடி சிவகோசாரியார் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தார்.


====================================================================================
இது இறைவன் சிவகோச்சாரியாருக்காக மட்டும் நடத்திய நாடகமா? அல்லது மக்களுக்காகவா? என்று யாருக்குத் தெரியும் ? . ஆனாலும் காலம் கடந்து நிற்கும் இந்த கதையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது அவசியம் . ஏனெனில் அப்பர், சுந்தரர் ,திருஞான சம்மந்தர் ,மாணிக்கவாசகர் காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் நடந்தது.அவர்களெல்லோரும் கண்ணப்ப நாயனாரைப் புகழ்ந்து பாடியுள்ளனரென்றால் எத்தகு பெருமை வாய்ந்தவர் அவர்

அவர் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்திருப்பவர்கள் எத்துணை பாக்கியம் செய்தவர்கள். என் நண்பர் ஒருவருடன் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் தியானம் செய்வோம்.. அப்போது அவர் சொல்லுவார்.
”இங்கே பாருங்கள். இத்தனை பெரிய கடலின் உள்ளே எத்தனை பிரம்மாண்டங்கள் உள்ளன ? அதன் இந்த அமைதியான தோற்றத்தை பார்க்கும் போதும், அதற்கு முன் அமர்ந்திருக்கும்போதும் இவ்வளவு பிரம்மாண்டமான இந்த கடலின் முன்னே நாமெல்லாம் எந்த மூலைக்கு?ஆனால் நமது அகங்காரம் எந்த அளவிற்கு இருக்கிறது இல்லையா ? ” என்பார். அதுபோல் நிறைய சமயங்களில் நமக்கு பக்தி மிகவும் அதிகம் என்று எண்ணும் போது நாம் கண்ண‌ப்ப நாயனாரை நினைவு கூர்வது நல்லது. என்னிடம் ஜாதகம் கொண்டு வருபவரிடம் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர்களின் ஜாதகத்தை பார்த்ததும் நான் சில சமயம் கோவிலுக்கு விடாமல் செல்லுங்கள் அவரை வழிபடுவதொன்றே வழி என்று சொல்வது வ்ழக்கம். அப்படி ஒருவர் மிகவும் துன்பத்தில் வந்திருந்தார் அவரிடம் சொல்லும் போது அதற்கு அவர் “ நான் நிறைய கோவிலுக்கு செய்திருக்கிறேன். எனக்கு பக்தி மிகவும் அதிகம். ஆனால் அந்த கடவுள் ஏன் தானோ இப்படி சோதிக்கிறான் ” .என்றார். நான் சொன்னேன் கண்ணப்ப நாயனார் கண்ணைப் பிடுங்கிக் கொடுத்தார். அப்படி ஏதாவது நீங்கள் செய்தீர்களா என்ன? என்றேன்.

ஏதோ நமக்கு தெரிந்த நாலு ஸ்லோகங்களையும் நாலு பாடலையும் தெரிந்து கொண்டால் நாம் கடவுளுக்கு நெருக்கமாகவோ சொந்தமாகவோ ஆகி விடமுடியுமா? என்ன?

என்றைக்குமே இறைவனை நெருங்கவே முடியாது. இறைவன் மிகப் பெரியவன் என்ற நினைவு நமக்கு எப்போதுமே இருக்கவேண்டும்.பக்தியில் நமக்கு அகங்காரம் வந்தால் நாம் உடனே இவரை த் தான் நினைவு கொள்ள வேண்டும்.

தூரத்திற்கு தூரமும் அவனே
நெருக்கத்திற்கு நெருக்கமும் அவனே

. ...................சந்திப்போம்

No comments: