About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Friday, January 15, 2010

கண்ணப்ப நாயனார் 1

வேடுவனுக்குத் தலைவனவன்
வேதனையில் தானிருந்தான்
காடுமலை சுற்றி வந்து
யானைபுலிக் குட்டியுடன்
ஓடி விளையாடல் காண
ஓர் பிள்ளை யில்லையென்று
நீடு தவம் முற்பிறவி செய்த பலன்
நின்றே யின்று பெற்றனன்‍‍‍‍‍.....

என்று இப்படித்தான் எழுதிகொண்டு போக ஆசை.ஆனாலும் எதுகையிலும் மோனையிலும் எண்ணத்தை சிதற விட்டு, பக்தி இங்கு சிறகடித்துப் போய் விடுமோ என்ற பயம்.

வெண்பா பாடலாம் குழுவினரிடம் சற்று பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து நேரிசை வெண்பாவிலும் இன்னிசை வெண்பாவிலும் விளையாடலாம்..அது வரை எளிய தமிழில்
பக்தி ரசம் பருக என்னோடு வாருங்கள்.
************************************************************************

நாடு பொத்தப்பி
நாகன் தந்தை
தாயோ தத்தை

பிள்ளையொன்று இல்லையென்று எல்லோருங் கூறிட , முருகனை வழிபட்டு தவமாய் தவ‌மிருந்து பெற்ற பிள்ளைதான் திண்ணப்பன். புலிக்குட்டி, முயற்குட்டி, பன்றிக்குட்டிகளுடன் விளையாடி வளர்ந்தான்.

இளமைப் பருவம் வந்தது.வயதோ பதினாறு. தந்தை நாகனோ வில்விழா ஏற்பாடு செய்து மலைப்பகுதி மறவர்கள் சுற்றத்தாரை வரச் செய்து வில்லைப் பிடிக்கசெய்தான். திண்ணனை தலைவனாக்கி தான் ஓய்வு கொண்டான்.


இந்த இடத்தில் ஒரு முக்கிய செய்தி.
சிலர் அறியாத செய்தியாகவும் இருக்கலாம்.
இந்த திண்ணப்பன் தான் முற்பிறப்பில் அர்ஜுனன்.
மகன் அபிமன்யு பதிமூன்றாம் நாளன்று போரில் மாள, மிகவருந்தி, பாசு பதம் வேண்டி சிவபெருமானை நோக்கி
தவம்புரிய, நேரில் இறைவனை கண்டதும் கணையைப்
பற்றிக் கேட்காமல், அன்பெனும் அமைதியைத் தருமாறு
கேட்கலானான்.
அதற்கு இறைவனோ முதலில் பாசுபதத்தை பெற்றுக் கொள்.அளவற்கரிய அன்பையும்,முக்தியையும் அடுத்த பிறவியில் தருவோம் என்றார்.
பன்றியின் காரணமாக உனக்கும் எனக்கும் போர் மூண்டதால் அதே பன்றியின் காரணமாக நீ வந்து என்னைக் கண்டு அருள் பெறுவாய்.என்று வரமளித்தார்.

“வாமன்றேர் வல்ல வயப்போர் விசயனைப் போல்
தாமாருலகில் தவமுடையார் ‍-தாமார்க்குள்
காண்டற் கரியராய் காளத்தி யாள்வாரைத்

தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று ”

-----நக்கீரத் தேவர்
(பதினோராந் திருமுறை )



திண்ணன் வேட்டையாட நாணன் ,காடன் என்ற இரு வேடர்களுடன் சென்றான். வழியில் ஒரு பன்றியை கண்டு பின்னால் ஓடி அப்பன்றியைச் சுட்டுக் கொன்று பின்பு அதை சுட்டு சாப்பிட தண்ணீரைத் தேடி காளத்திமலைக்கு வந்தனர்.

அங்குள்ள மலைசாரலில் சென்று குடுமிதேவரைக் கும்பிடலாம் என்று வேடர் கூற திண்ணனும் சென்றான் .இங்கு வரும்போதெல்லாம் மனச்சுமை குறைந்து மகிழ்ச்சி உண்டாகிறதே என்கிறார்.பன்றியை தீ மூட்டி சுட்டுவை என்று காடனிடம் சொல்லி ,காண‌னுடன் மலையேறுகின்றான்
.
மலைமீது ஏறிச் செல்ல செல்ல நாயகனை நெருங்க‌ நெருங்க ஆனந்தம் பொங்குகிறது. இறைவன் குலத்தைப் பார்த்தானா? மனிதர்களாகிய நாம் தான் குலமென்றும் குணமென்றும் காண்கின்றோம்.

“கண்ணுக்கு குலமேது கண்ணா
கருணைக்கு நிறமேது
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
‍‍‍கையில் கொள்பவரெல்லாம் கீழாவார் ”

. என்ற பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

.உயர் குலத்தை சேர்ந்த பிராமணனாயினும் சரி தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த வேடுவனாயிருந்தாலும் சரி பக்தியெங்குணடோ அங்கு நான் தேடிவருவேன் என்கிறார்.
அவ்வப்போது இறைவன் இவற்றையெல்லாம் எடுத்துக் காண்பிப்பதுண்டு


இறைவன் சம்மந்த்ப்பட்ட அனைத்து நூல்களையும் வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் புராணங்களையும்
நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது.வெறும் தர்க்கங்கள் தான் உண்டாகும். அதனால் நம் நேர விரயமும் வீண் விரோதமும் தான் வளரும். எல்லாவற்றிலும் மறைமுகமாக ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் அக்கால மக்களுக்கேற்ற வகையில் சிலவற்றை சொல்லியிருப்பார்கள்



நேற்று ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார். முருகருக்கு ஏன் இரண்டு மனைவிகள் என்று. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பொதுவாக பதில் சொல்வது கிடையாது.. இருந்தாலும் எப்போதோ சுகி சிவம் அவர்கள் சொனனது நினைவுக்கு வந்தது. இருப்பதிலேயே உயர்ந்த குலத்தை சேர்ந்த தெய்வானையையும் தாழ்ந்த குலத்தில் பிறந்த வள்ளியையும் மணந்து இருவரும் தனக்கு சமமென்று உலகிற்கு எடுத்து காட்டுவதற்காகவேதான். என்றார். இத்துடன் நின்று விடவேண்டும்

எம்பெருமானை கண்டான் திண்ணப்பன்
.கண்களில் நீர் சொரிய சிவபெருமானை
கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்து ஒன்றும் புரியாமல் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு சிலை போல் சிறிது நேரம் நின்றார்.
இங்கே ஒரு விஷயம்
எப்போதோ ஒரு ஹதீஸில் படித்தது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒரு பெரியார் வந்து எந்த துஆ அல்லாவை சென்று சேர்கிற்து

அதற்கு நபிகள் " எந்த துஆ செய்யும் போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ, எந்த து ஆ செய்யும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறதோ அந்த‌ துஆ அல்லாவை சென்று சேர்கிற்து

அதற்கு நபிகள் " எந்த துஆ செய்யும் போது நம் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறதோ, எந்த து ஆ செய்யும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறதோ அந்த‌ துஆக்கள் அல்லாவை சென்று சேர்கிறது .என் கிறார்."
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் " ..என்று இதைத் தான் வள்ளுவரும் சொல்கின்றார்.
மீண்டும் இங்கே வருவோம்

திண்ணன் அங்கே இறைவனுக்கு பூவாலும் இலையாலும் அலங்காரம் செய்விக்கப் பட்டு நீரால் அபிஷேகமும் செய்யப்பட்டு இருந்ததை கண்டு யார் இவ்வாறு செய்தது என வின‌வ, அதற்கு காணனோ ' நானும் உன் தந்தையும் ஒரு முறை இங்கே வந்த போது ஒரு பார்ப்பான் வந்து இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறோம்.
அவர்தான் இன்றும் இப்படி செய்திருக்க வேண்டும் "என்றான். அதற்குள் திண்ணனுக்கும் நாமும் இனி இவ்வாறே செய்ய வேண்டும் என்ற ஆவல் வந்தது. பிறகு திடீரென்று "ஐயோ எம்பெருமான் தனிமையில் இருக்கிறாரே பசிக்குமே உணவுக்கு எங்கே போவார்". என்று அழுகின்றார்.

இறைவன் எங்கோ வானத்தில் நமக்கப்பாற்பட்டு தூரத்தில் இருப்பதாக நம்மில் சிலருக்கு நினைப்பு இருக்குமல்லவா?
ஒரு மீனானது நீருக்குள்ளேயே இருந்து கொண்டு நான் தண்ணீரை பார்க்க வேண்டுமே அது எங்கே என்று தேடுவது போலிருக்கிறது. இறைவன் எப்போது ந்ம்மோடே இருக்கிறான் இல்லையா ?
திண்ணனுக்குவெறும் சிலையாக வெறும் கல்லாக இருந்தால் அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமா?

..........சந்திப்போம்

No comments: