About Me

சென்னை, தமிழ் நாடு, India
சொல்ல நிறைய இருக்கிறது.

Wednesday, January 13, 2010

உள்ளே செல்லும் முன்

அன்பு நெஞசங்களே! வணக்கம்.

இணைய தளத்தினுள் இப்படி ஒரு பதிவர் வட்டம் கூட்டமாக கும்மியடித்துக் கொண்டிருப்பது இது காறும் எனக்கு தெரியாமல் இருந்தது.உள்ளே சென்றதும் ஆச்சரியம் தாஙக‌முடியவில்லை.அடேயப்பா எத்தனை எத்தனை கவிஞர்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்கள்,எத்தனை எத்தனை ஆன்மீகவாதிகள்,சோதிடர்கள் ,எத்தனை எத்தனை நாத்திகம் பேசும் அன்பர்கள்,சமையல் குறிப்புகளை அள்ளித் தரும் இல்லத்தரசிகள்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஒன்றுமே புரியவில்லை தலை சுற்றியது தான் மிச்சம்.எனக்கோ பின்னூட்டம் கூட இடத் தெரியாது இப்போதுதான் கற்றுக் கொண்டேன். இதில் என் பஙகுக்கு எதையாவது தரலாமென்றால் எதைப் பற்றி எழுதுவது என்றே தெரியவில்லை. சோதிடம் பற்றி எழுதலாமென்றால்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ S.V சுப்பையா போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே உலா வருகிறார்கள். ஆன்மீகம் பற்றி ஏதாவது எழுதலாமென்றால் அதிலும் மதுரையம்பதி, குமரன் போன்றோர் எதிரே தென்படுகிறார்கள். கவிதையோ சொல்லவே வேண்டாம். இவை மூன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.

சில பதிவுகளைப் பார்த்ததும் நாம் ஏதும் எழுத் வேண்டாம் எல்லாவற்றையும் படித்து ரசித்துக் கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆயினும் உள்ளிருந்து ஏதோவொன்று தூண்டிக் கொண்டிருப்பதால் ஆன்மிகத்தில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அது சிறிதளவேனும் ,சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் அதுவே போதுமல்லவா ?

நாகரிகம் என்பது ஒரு நகரத்தை சுற்றி ஏற்படுகிறது. ந‌கரமோ ஒரு நகரைச் சுற்றி உண்டாவது.

நகர் என்றால் கோவில் என்று எப்போதோ கி வா அவர்கள் எழுதியதாக படித்த ஞாபகம்.

அப்படி எனது இல்லத்தைச் சுற்றி ஒரே கோவிலாக அமைந்திருக்கும். வடக்கே எல்லையம்மன் கோவிலும் திருவேட்டீஸ்வரன் கோவிலும்,

கிழக்கே பார்ததசாரதி கோவிலும், கோலமணி அம்மன் கோவிலும், தெற்கே தீர்த்த கபாலீஸ்வரர் கோவிலும், துலுக்கானந்தம்மன் கோவிலும் இவை தவிர நாற்புறமும் மசூதிகளும் முன்னும் பின்னும் கிறித்துவ தேவாலயமும் இருக்கின்றது. எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன் என் இல்லமே ஒரு கோவிலாகத்தான் இருக்கும் . திருவல்லிக்கேணியில் பிறந்து வளர்ந்து இறைச் சூழலிலேயே இருப்பதனாலோ என்னவோ இறைவனைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் எழுதத் தோன்றுகிறது. ====

…………….சந்திப்போம்

1 comment:

கவிதன் said...

வாருங்கள் ...வணக்கம் ஐயா ! வலைதளங்களில் பேசவும் , பகிர்ந்துகொள்ளவும் நிறைய இருக்கின்றன......

உங்கள் தமிழ் மிக அருமையாக இருக்கிறது..... தொடரட்டும் ..... வாழ்த்துக்கள்!